மதச் சண்டை வேண்டாம்: 5 வயது சிறுவனின் ஸ்கேட்டிங் பயணம்
சென்னை:
மத ஒற்றுமையை வலியுறுத்தி 5 வயது சிறுவன், சென்னையிலிருந்து, பாண்டிச்சேரிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)ஸ்கேட்டிங் பயணம் தொடங்கினான்.
பிராணேஷ்வரன் என்னும் இந்தச் சிறுவன், சென்னையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. படித்துவருகிறான்.
மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி இன்று சென்னையிலிருந்து, பாண்டிச்சேரிக்கு ஸ்கேட்டிங் பயணத்தைதொடங்கினான். இந்தப் பயணத்தை அமைச்சர்கள் சம்பத், வேலுச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிராணேஷ்வரன் பயணம் செய்யும் மொத்த தூரம் 162 கி.மீ. இன்று பயணத்தைத் தொடங்கிய இந்தச் சிறுவன்தினமும் 55 கி.மீ. தூரம் பயணம் செய்து, வரும் வியாழக்கிழமை பாண்டிச்சேரி அடைகிறான்.
அங்கு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பிராணேஷ்வரனை வரவேற்கிறார். சிறுவனின் பெற்றோர், பள்ளிஆசிரியர்கள், சிறுவனின் பயிற்சியாளர் ஆகியோர் வாகனங்களில் சிறுவனுடன் பயணம் செய்கின்றனர்.
இந்த பயணம் குறித்து பிராணேஷ்வரனிடம் கேட்டதற்கு, குஜராத்தில் எல்லோரும் சண்டை போடுகிறார்கள்.அவர்கள் எல்லோரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த பயணம் என்றுஅவன் கூறினான்.












Click it and Unblock the Notifications