காஷ்மீர்: மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

பாரமுல்லா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் புகுந்த 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர்நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டம் மிரன்கண்ட் என்ற இடத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலைஅடுத்து நேற்று (திங்கள்கிழமை) மாலை அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் வீடு வீடாகச் சென்று சோதனைசெய்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால்சுட்டவாறே ஓடத் துவங்கினர். இதனால் பாதுகாப்புப் படையினரும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இதனால் தீவிரவாதிகள் இருவரும் அருகில் இருந்த ஒரு மசூதியில் புகுந்து கொண்டு அங்கிருந்துபாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாதுகாப்புப் படை போலீசார் அந்த மசூதியைமுற்றுகையிட்டனர்.

பிறகு தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டன. அதன் பிறகு அவர்களைசரணடையுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் சரணடையாமல் இரவு முழுவதும் தொடர்ந்துதுப்பாக்கியால் சுட்டவண்ணம் இருந்தனர்.

தொடர்ந்து 14 மணி நேரம் அவர்கள் சரணடையாததால், வேறு வழியில்லாமல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலைதீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர்.

நீண்ட நேரமாகியும் தீவிரவாதிகள் சரணடையாததால் தான் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதனால் மசூதிக்குஎந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+