தாய்லாந்தில் அமைதிப் பேச்சு: புலிகள் யோசனை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால், தாய்லாந்தில் நடத்தலாம்என்று விடுதலைப்புலிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே அமைதிப் பேச்சுவார்த்தைக்கானஅனைத்து முயற்சிகளிலும் ரணில் விக்கிரமசிங்கே ஈடுபட்டார்.

டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்தே தொடங்கிய தற்காலிகப் போர்நிறுத்தம், கடந்த பிப்ரவரி 22ம் தேதியிலிருந்தநிரந்தரப் போர்நிறுத்தமாக மாறியது.

இதற்கிடையே இனப் பிரச்சனைக்கான அமைதிப் பேச்சுவார்த்தையை எங்கு நடத்தலாம் என்று பல்வேறு விதமாகயூகங்களும் யோசனைகளும் கிளம்பி வருகின்றன.

தங்களுடைய அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தென்இந்தியாவின் ஏதாவது ஒரு நகரில் (சென்னை, பெங்களூர் அல்லது திருவனந்தபுரம்) பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று புலிகள் முதலில் யோசனை தெரிவித்தனர். இந்திய அரசிடம் அவர்கள் அனுமதியும் கேட்டுவிட்டனர்.

இதற்கு இந்தியாவின் பல கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. முன்னாள் இந்தியப் பிரதமர்ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவம் காரணமாகவே இந்த எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனாலும் இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் தாய்லாந்தில் வைத்து பேச்சுநடத்தலாம் என்று புலிகள் புதிய யோசனையைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையை எங்கே, எப்போதுநடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே வரும் 25ம் தேதி இலங்கை வரும் பாலசிங்கம், வன்னி சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனைச் சந்திக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+