"அம்மா"வுக்காக தீ மிதித்த எம்.எல்.ஏ.
மேல்மலையனூர்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து மேல் மலையனூர் அம்மன் கோவிலில் தீமிதித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார் செஞ்சி அதிமுக எம்.எல்.ஏவான ஏழுமலை.
ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி வெற்றி மற்றும் மீண்டும் முதல்வர் ஆனது ஆகியவற்றை அதிமுகவினர் பலவிதங்களில் கொண்டாடி வருகின்றனர். உச்சகட்டமாக திருப்பதி கோவிலில் தனது நாக்கையே தானமாககொடுத்தார் அதிமுக தொண்டர் ஒருவர்.
இந்த நிலையில் செஞ்சி எம்.எல்.ஏ ஏழுமலை, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஜெயலலிதா வெற்றி பெற்றால் தீ மிதிப்பதாக அவர் வேண்டிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை இங்கு நடந்த மாசிப்பெருவிழாவின்போது தீ மிதி விழாவும் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீ மிதித்தனர். அவர்களுடன் ஏழுமலையும் சேர்ந்து தீ மிதித்து தனதுவேண்டுதலை நிறைவேற்றினார்.












Click it and Unblock the Notifications