ஜெ. காரை வழிமறிக்க முயன்ற பார்வையற்ற மாணவ-மாணவிகள் கைது
சென்னை:
உதவித் தொகையை திரும்பவும் வழங்கக் கோரி போராட்டம் நடத்திய பார்வையற்ற மாணவ-மாணவியர், தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் காரை வழிமறிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான உதவித் தொகையை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அதைத்திரும்பவும் வழங்கக் கோரி சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் கண்ணகி சிலை இருந்த இடத்திற்கு அருகில்பார்வையற்ற மாணவ-மாணவிகள் இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றார். சாலை மறியலைக் கைவிடுமாறு மாணவ-மாணவியரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜெயலலிதா வந்துகொண்டிருந்த காரை வழிமறிக்கவும் அவர்கள் முயன்றனர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்து நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவ-மாணவிகளைப் போலீசார்கைது செய்தனர்.
சாலை மறியல் காரணமாக காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications