நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல் ஏன்? - ஜெ. விளக்கம்
சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் அரசே கொள்முதல்செய்ய வேண்டும் என்பதுபோல் சிலர் கூறி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை)கூறினார்.
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டது குறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொது விநியோகத் தேவைக்கு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது அரசு நியதி. ஆனால் விவசாயிகள்நலன் கருதி தரம் மற்றும் ஈரப்பத தளர்வுகள் செய்து தேவைக்கு அதிகமாகவே நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.
எனினும் விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை காட்டாதது போலவும், அவர்கள் உற்பத்தி செய்யும் நெல்முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் கடமை என்பது போலவும் சிலர் கூறி வருவது அரசின்காழ்ப்புணர்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டபோது, விவசாயிகள் வேறு எங்கும் நெல்லைஎடுத்துச் செல்ல முடியாதபடி தடைகள் இருந்தன.
ஆனால் வெளி மாநிலங்களுக்கு நெல்லோ அல்லது அரிசியோ கொண்டு செல்வதற்குப் பல ஆண்டுகளாக இருந்ததடையை அதிமுக அரசுதான் தற்போது நீக்கியுள்ளது என்பதையும் வியாபாரிகளின் நெல்-அரிசி கையிருப்புகளைஇரட்டிப்பாக்கி உத்தரவிட்டதும் நாங்கள்தான் என்பதையும் மக்கள் நன்கு அறிவர்.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டதால்தான், மார்ச் 15ம் தேதி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டோம். அதற்கானபணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் வரும் 15ம் தேதி வரை வட்டக் கிடங்குகளில் நெல் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
கடந்த ஆட்சியில் படு பாதாளத்துக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளைக் கைதூக்கி விடப்படும்நடவடிக்கைகளைத்தான் அதிமுக ஆட்சி மேற்கொண்டுள்ளது என்பதை விவசாயிகளுக்கும் மக்களுக்கும்தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications