லண்டன் ஹோட்டல் வழக்கு: சசிகலாவின் புதிய மனு தள்ளுபடி
சென்னை:
லண்டன் ஹோட்டல் வழக்கு தொடர்பான ஆவணங்களை, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை நீதிபதிஆறுமுகபெருமாள் ஆதித்தன் தள்ளுபடி செய்தார்.
லண்டனில் நட்சத்திர ஓட்டலை வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முதல்வர்ஜெயலலிதா, தினகரன் எம்.பி., சசிகலா, இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து முதலாவது தனி நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்கக் கோரி சசிகலா, இளவரசி ஆகியோர் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன், அவர்களுக்கு தமிழில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கொடுக்க உத்தரவிட்டார். தற்போது ஆவணங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி மும்முரமாகநடந்து வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை சசிகலா தரப்பில் முதலாவது தனிநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.தற்போது மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கிளரிக்கல் பணியில் உள்ளவர்கள், அதனால் முறையாகஅதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பாளர்களை கொண்டு மொழிப் பெயர்க்க வேண்டும் என்றுஅந்த மனுவில் சசிகலா கூறியிருந்தார்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஆறுமுகம்பெருமாள் ஆதித்தன், பிறப்பித்த உத்தரவில்கூறியிருப்பதாவது:
மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் தகுதி குறித்து முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு கடிதம் மூலம்கேட்கப்பட்டது. இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், இவர்கள் அனைவரும் மொழிப்பெயர்ப்பு பணிக்குதகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அவர்கள் பெஞ்ச் கிளார்க்காக பணியாற்றியிருந்தாலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின்மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள். எனவே தகுதி வாய்ந்த நபர்களை கொண்டே மொழிப்பெயர்ப்பு பணிநடந்து வருகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications