முதல்வரின் தனி அதிகாரி வீட்டில் திருடிய 3 பேர் கைது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் தனி அதிகாரி வீட்டில் திருடிய 3 திருடர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
முதல்வரின் தனி அதிகாரியாக இருப்பவர் ரீட்டா ஹரீஷ். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இவரது வீடு உள்ளது.
இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியில் சென்றிருந்தார். பிற்பகல் 2 மணிவாக்கில் அவர்கள் வீடு திரும்பினர்.
வீட்டுக் கதவைத் திறக்க முயன்றபோது வீட்டுக்கு உள்ளே சிலர் நடமாடுவது தெரிய வந்தது. அப்போது 3இளைஞர்கள் திருடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் கூச்சலிடவே, வீட்டுக்கு காவலாக இருந்த போலீசாரும் பொதுமக்களும் ஓடி வந்தனர்.உடனே திருடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆனால் போலீசாரும் பொதுமக்களும் அவர்களை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் 3 பேரும் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள் பின்னர் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications