அமெரிக்க தூதரக புதிய விசா பிரிவு 23ல் துவக்கம்
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் புதிய விசா பிரிவை முதல்வர் ஜெயலலிதா வரும் 23ம் தேதிதுவக்கி வைக்கிறார்.
இது குறித்து அமெரிக்க துணை தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் அதிக அளவு அமெரிக்க விசா விண்ணப்பங்கள் விற்கப்படுவதும், வாங்கப்படுவதும் சென்னையில்தான். அமெரிக்க விசா விண்ணப்பங்களை கையாள்வதில் உலகிலேயே 14வது இடத்தை சென்னை அலுவலகம்பெற்றுள்ளது.
எனவே இங்கு இட வசதி அவசியமாகப்பட்டது. இதற்காக இக்கட்டிடம் சீரமைக்கப்பட்டு அதிக வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் விசா பிரிவு முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விசா பிரிவை வரும் 23ம் தேதி சனிக்கிழமை காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றிமுறைப்படி துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் பெர்னார்டு ஜே. ஆல்டர், கிளைட்எல்.ஜோன்ஸ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications