இமாம் அலியைப் பிடிக்க கேரள எல்லையில் 7 சோதனைச் சாவடிகள்
திருநெல்வேலி:
தலைமறைவாக உள்ள அல்-உம்மா கைதியான இமாம் அலி கேரள மாநிலத்திற்கு தப்பிச் செல்லலாம் என்றுகருதப்படுவதால், அம்மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியில் 7 புதிய சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.
இமாம் அலி தற்போது திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் நடமாடி வருவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், இம்மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகள் வழியாககேரளாவிற்கு அவன் தப்பிச் செல்லலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி, இரணியல், களியல், களியக்காவிளை உள்ளிட்ட 7எல்லைப் புற இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநில எல்லைக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.சந்தேகத்திற்கிடமான நபர்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இமாம் அலி விரைவில் பிடிபடுவான் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications