வி.எச்.பியால் வாஜ்பாய் அரசுக்கு மீண்டும் தலைவலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த வாரம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.எச்.பி.) பூமி பூஜை மற்றும் தூண் தானம் வழங்கும் விழா தொடர்பாககூட்டணிக் கட்சிகளாலேயே மிரட்டலுக்குள்ளான வாஜ்பாய் அரசுக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டதில் உயிரோடு கருகி இறந்தவர்களின் சாம்பலுடன் நாடு முழுவதும்ஊர்வலம் செல்லப் போவதாக வி.எச்.பி. கூறியதற்கு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வி.எச்.பியின் இந்த யாத்திரை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தாவிட்டால் கூட்டணியிலிருந்து நாங்கள் நிச்சயம் விலகிக்கொள்வோம் என்று பாஜக அரசுக்கு சமதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்போது மத்தியில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான், வி.எச்.பி. அரசு அல்ல என்று மற்றொருகூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கொஞ்சம் கடுப்புடனேயே கூறியுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக அல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் நாளை(வெள்ளிக்கிழமை) முக்கியமான கூட்டம் நடத்தவுள்ளன.

ஆனால் சபர்மதி ரயிலில் எரித்துக் கொல்லப்பட்ட 58 இந்துக்களுக்கும் நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும்என்பதற்காக, தாங்கள் இந்த யாத்திரையைக் கட்டாயம் நடத்தப் போவதாக வி.எச்.பி. அமைப்பினர் உறுதியாகஅறிவித்துள்ளனர்.

இதனால் வாஜ்பாய் அரசுக்கு மீண்டும் ஒரு தலைவலி ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+