சென்னையில் தனியார் மயமாகும் 40 பஸ் "ரூட்"கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 40 பஸ் வழித் தடங்களை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் பஸ் வழித் தடங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் வழித் தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40 வழித் தடங்களில் தினசரிரூ.3,000க்கும் குறைவாகவே பணம் வசூல் ஆவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த 40 வழித் தடங்களிலும்தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்க உள்ளது.
முதல் கட்டமாக எழும்பூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை உள்ள வழித்தடத்தில் தனியார்பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
படிப்படியாக 40 வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications