அதிமுகவில் தொடர்கிறது "களை" எடுக்கும் பணி
சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுகஉறுப்பினர் ஒருவரைக் கட்சியிலிருந்து இன்று (வியாழக்கிழமை) நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
பாலன் கொலை வழக்கு தொடர்பாக செந்தில்குமார் மற்றும் மாணிக்கம் ஆகியோரை போலீசார் சமீபத்தில் கைதுசெய்தனர்.
இவர்களில் மாணிக்கம் சென்னை-பூங்காநகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆவார். செந்தில்குமாருடன் சேர்ந்துகொண்டு இவர் பாலனை மிரட்டி, ரூ.1 கோடி வரை கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அவரைக் கொலை செய்துவிட்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் மாணிக்கம் நீக்கப்படுவதாக இன்று அறிவித்தார்.
கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும" கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாலும், கழகத்திற்குக்களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும் மாணிக்கம் கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் மாணிக்கத்துடன் அதிமுகவினர் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும்ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இதற்கிடையே கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி,சைதாப்பேட்டை பகுதி ஜெயலலிதா பேரவையின் இணைச் செயலாளரான ஜெகா என்ற ஜெகநாதனும்அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கரூரில் சூதாட்ட விடுதி நடத்திய முன்னாள் எம்.எல்.ஏவான வடிவேலு உள்பட ஒன்பது அதிமுகவினரை இரண்டுநாட்களுக்கு முன்புதான் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications