காட்டில் வறட்சி: கிராமத்தைத் தேடும் மான்கள், குரங்குகள்
சேலம்:
சேலம் மாவட்ட வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் காடுகளிலிருந்து மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் வைத்திய கவுண்டனூர், தம்மம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளையொட்டிய காட்டுப் பகுதியில்கடும் வெயில் காரணமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான மான்கள், முயல்கள், குரங்குகள் ஆகியவை கிராமப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன.இதில் பல மான்கள், ஓடும்போது முட்களில் சிக்கி பலியாயின.
காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்துள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இன்று மான், குரங்கு என்றஅளவில் உள்ளது, நாளை கரடி, புலி என பெரிய விலங்குகள் வந்து விட்டால் என்ன செய்வது என்று அவர்கள்அச்சத்தில் உள்ளனர்.
காட்டுக்குள் தண்ணீர் தொட்டிகளை வைத்தால் விலங்குகள் கிராமத்திற்குள் வராது என்று கிராம மக்கள்கூறுகின்றனர். அரசு இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications