ஆபாச இன்டர்நெட் தளங்களுக்கு தடை கோரி மனு
சென்னை:
இன்டர்நெட் மையங்களில் ஆபாச இன்டர்நெட் தளங்களைப் பார்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஞானேஸ்வரன் என்பவர் தான் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் இன்டர்நெட் மையங்களில் ஆபாச தளங்களைப் பார்ப்பதுகட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. இன்டர்நெட் மையங்களை நடத்துவோர் இந்த தளங்களை பார்ப்பதற்குதடை விதிக்காமல் உள்ளனர்.
10 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்திற்கு ஆபாச படத்தைப் பார்க்க முடியும் என்ற அளவில் வசதி ஏற்பட்டுவிட்டதால் பள்ளி மாணவர்கள் கூட இந்த ஆபாச தளங்களைப் பார்க்க அலை மோதுகின்றனர். இதனால்மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதோடு, அவர்களது படிப்பும் பாழாகிறது.
இந்தியாவின் கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இதுபோன்ற ஆபாச தளங்களை உடனடியாகதடை செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறி ஆபாச தளங்களை பார்க்க வழி செய்யும்இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்களை தண்டிக்க வேண்டும்.
இதுபோன்ற மையங்களுக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று அந்த மனுவில் ஞானேஸ்வரன் கூறியுள்ளார்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, பக்தவச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுதொடர்பாகவிளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications