சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்.பி. சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கரூர் மாவட்டத்தில் உள்ள சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அம்மாவட்ட எஸ்.பி. மற்றும்டி.எஸ்.பி. ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் சூதாட்ட விடுதி நடத்தி வந்த முன்னாள் எம்.எல்.ஏவான வடிவேலு உள்பட 9 பேரை அதிமுகவிலிருந்துநீக்கி தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரு நாட்களுக்கு முன்புதான்உத்தரவிட்டார்.
சூதாட்ட விடுதி நடத்தியதில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது என்று ஜெயலலிதாவுக்குத் தகவல் சென்றது.
பின்னர் அந்தத் தகவல் நேரடியாக தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா பார்வைக்குச் சென்றது.
அவரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கரூர் மாவட்ட எஸ்.பியான ராமராஜன் மற்றும் டி.எஸ்.பியானசி.ஏ. சாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications