இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ரணில் கட்சி வெற்றி
கொழும்பு:
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிஅபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த முதற்கட்டத் தேர்தலில் இதுவரை வெளியான 104 முடிவுகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கியதேசியக் கட்சி 101 இடங்களைப் பெற்று சாதனை படைத்தது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் முன்னணிக்கு இரண்டு இடங்களும், ஜனதா விமுக்தி பெரமுனாவுக்குஒரே ஒரு இடமும் கிடைத்தன.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை வெகு விரைவில் நடத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ரணில்எடுத்து வருகிறார்.
ரணிலின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகவே அந்நாட்டு மக்கள் அவருடைய கட்சியை இவ்வளவுபெருவாரியான வெற்றியைப் பெற வைத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட உள்ளாட்சித் தேர்தல், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும்வடகிழக்குப் பகுதிகளில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications