விபூதி விவகாரம்: கருணாநிதி மீது நடவடிக்கை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விபூதி பூசுவதை விமரிசித்த திமுக தலைவர் கருணாநிதி மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச்சேர்ந்த கெளதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் வசிக்கும் கெளதம், தான் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி செய்தித்தாளை படித்தபோது, அதில் விபூதி பூசுவது மூட நம்பிக்கை என்றுகருணாநிதி கூறியிருப்பதாக படித்தேன்.

இதைப் படித்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். தீவிர மத நம்பிக்கை உள்ள என்னை அவமானப் படுத்தியதாகஉணர்ந்தேன்.

மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ள கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி தாம்பரம் காவல் நிலையத்தில் 30ம் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

எனவே உடனடியாக கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்என்று கெளதம் தனது மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தாம்பரம் காவல்நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+