Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை: கண்காணிப்புக் குழுவுக்கு வேலையே இல்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை என்பதால் அங்கு கண்காணிப்புக்குழுக்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிரான்பெர்னண்டோ கூறியுள்ளார்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சமீபத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்தஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆயுதங்களைச் சேர்ப்பதாகவும் ஆட்களைக் கடத்துவதாகவும்விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை புலிகள் உடனடியாக மறுத்தனர். இவ்விஷயத்தில் இலங்கை அரசும்புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளோ, இலங்கை அரசோ போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை என்றுபெர்னாண்டோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

யாரும் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறவில்லை. அதனால் கண்காணிப்புக் குழுக்களுக்கு வேலையேஇல்லாமல் போய்விட்டது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் அரசு ஆக்கிரமிப்புப் பகுதியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. கண்காணிப்புக்குழுவுக்கும் இது குறித்து எந்தத் தகவலும்வரவில்லை. அந்தத் தகவல் உண்மையாக இருந்தால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும்.

அமைதிப்பேச்சுவார்த்தை கண்டிப்பாக இலங்கையில் நடக்காது. ஏதாவது ஒரு வெளிநாட்டில்தான் பேச்சுவார்த்தைநடக்கும். பேச்சுவார்த்தைக்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்குமறு நார்வே தூதுக் குழுவிடம் இலங்கை அரசுகோரியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.இப்பேச்சுவார்த்தை வெகு விரைவில் நடக்கவுள்ளது. இந்த வருட மத்தியில் முழுப் பேச்சுவார்த்தையும் தொடங்கிவிடும்.

உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, அமைதிப்பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியே என்று பெர்னாண்டோ கூறினார்.

வரும் 25ம் தேதி மாலத்தீவு வழியாக இலங்கைக்கு வரும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம், தங்களமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை வெகு விரைவில் தொடங்கும் என்றும் மாலத்தீவு அல்லது தாய்லாந்தில்பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+