For Daily Alerts
Just In
விருதுநகரில் ஈவ் டீசிங்கால் மாணவி தற்கொலை: வாலிபர் கைது
விருதுநகர்:
விருதுநகரில் ஈவ் டீசிங் தொடர்பாக ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, ஒரு வாலிபரைப்போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரைச் சேர்ந்தவர் தீபா ராணி என்ற மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
இவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது, முத்துக்குமார் என்ற வாலிபர் இவரைத் தொடர்ந்து சென்றுகிண்டலடிப்பது வழக்கம்.
இதனால் மனமுடைந்த தீபா ராணி, சமீபத்தில் தன்னுடைய வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து முத்துக்குமாரைப் போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Sunday, March 24, 2002, 5:30 [IST]