சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கவரி வசூல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்லும் வாகனங்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது.
சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ள 113 கி.மீ. தூரத்திற்கு கிழக்குக் கடற்கரை சாலை சமீபத்தில்சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இன்று முதல் சுங்க வரிவசூலிக்கப்படுகிறது.
இதன்படி கார் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.47ம், சென்று திரும்பி வர ரூ.85ம் வசூல்செய்யப்படுகிறது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55ம், சென்று திரும்பி வர ரூ.105ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கனரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.70ம், சென்று திரும்பி வர ரூ.125ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு இந்த வரி வசூல் கிடையாது.












Click it and Unblock the Notifications