நாளை அவசரமாக கூடுகிறது தமிழக பாஜக
சென்னை:
தங்களுடனான உறவைத் திமுக துண்டித்துக் கொண்டதையடுத்து பாஜக தலைவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை)அவசரமாகக் கூடி விவாதிக்கவுள்ளனர்.
தமிழக பாஜகவுடனான தங்களது உறவு முறிந்து விட்டது என்று நேற்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துவிட்டார். ஆனாலும் மத்தியில் உள்ள பாஜகவுக்குத் தங்களுடைய ஆதரவு தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
திமுகவின் இந்த அறிவிப்பால் பாஜக எந்த அளவிலும் பாதிக்கப்பட்டுவிடவில்லை என்று தமிழக பாஜககூறியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நாளை பாஜக தலைவர்கள் சென்னையில் அவசரமாகக் கூடி விவாதிக்கவுள்ளனர்.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ராமாராவ் உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தமிழக பாஜகவுடனான உறவை திமுக துண்டித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடவடிக்கைகளைமேற்கொள்வது என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பாஜக தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications