வேட்பாளர்களுக்காக காத்திருக்கும் தேர்தல் அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், பாப்பாப்பட்டி ஆகிய 3 பஞ்சாயத்து தலைவர் தேர்தலில்இதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 3 பஞ்சாயத்துக்களுக்கும் கடந்த முறை நடத்தப்பட்டதேர்தலின்போது யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் தேர்தலை நடத்த முடியவில்லை. உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன் வரவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக தேர்தல்ஆணையம் அறிவித்தது. இருப்பினும் இதுவரை ஒரு வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் இந்த முறையும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications