நாளையாவது "பொடோ" நிறைவேறுமா?
டெல்லி:
மக்களவையில் மட்டும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபாவில் தோல்வியடைந்த "பொடோ" சட்டமசோதா, இந்த இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது.
பொடோ சட்ட மசோதா எப்படியும் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் எதிர்க் கட்சிகள் அனைத்தம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் "பொடோ" விவகாரத்தில்எதிர்க் கட்சிகளுடன்தான் கைகோர்த்துக் கொண்டு நிற்கிறது. மக்களவையில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துவாக்களித்த இக்கட்சி, நாளைய கூட்டுக் கூட்டத்திலும் இந்நிலையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளது.
இந்நிலையில் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய், பொடோ சட்டம் நாளை நிச்சயம்நிறைவேறி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "பொடோ"வை நிச்சயம் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நாட்டின் நலனை மட்டுமல்லாது, தங்கள் கட்சியின் நலனையும் கருத்தில் கொண்டு "பொடோ" சட்டத்தைநிறைவேற்ற காங்கிரஸ் உதவ வேண்டும் என்றும் வாஜ்பாய் தெரிவித்தார்.
ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இருஅவைகளையும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications