மதுரையில் போலீஸ் ஜீப் மீது 2 முறை மோதிய ஆட்டோ: 3 பேர் கைது
மதுரை:
மதுரையில் தீவிரவாதிகளைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தனிப் படை போலீஸார் சென்ற ஜீப்பை பின் தொடர்ந்துவந்த நபர்களை போலீஸார் பிடித்தனர்.
அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோரை ஒரு கும்பல் துப்பாக்கிமுனையில் மீட்டுச் சென்றது. அவர்களில் ஹைதர் அலி பிடிபட்டு விட்டான். இமாம் அலி இன்னும் தலைமறைவாகஉள்ளான்.
அவனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் போலீஸார்தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டு செல்லப் பயன்படும் கவச வாகனம்ஒன்று திங்கள்கிழமை மதுரை நத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அதில் இரண்டு போலீஸார் மட்டும் இருந்தனர். அந்த வாகனம் கோகலே நகர்ப் பகுதியில் சென்றபோது, ஒருஆட்டோ, போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. பிறகு பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் மீண்டும்ஒரு முறை மோதியது.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக ஆட்டோவை வழி மறித்து நிறுத்தினர். அதில் இருந்த 3 பேர்,போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர்.
ஆனால் போலீஸார் துரத்திச் சென்று அவர்களைப் பிடித்தனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்புஇருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications