கொலை செய்யச் சென்ற 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த 2 ரெளடிகள் உள்ளிட்ட 4 பேரைப்போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி காட்டான் சுப்ரமணியன். இவனது கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜோசப் என்றஜோ மற்றும் பார்த்திபன். இவர்கள் இருவரும் ஒரு ஆட்டோவில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடந்தஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸார் நடத்திக் கொண்டிருந்த வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் கைதுசெய்த போலீஸார், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு பிரபல ரெளடியான அணுகுண்டு ஆறுமுகம் என்பவரைக் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள்சென்று கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இதேபோல, அதே சாலையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்வதற்காகப்போய்க் கொண்டிருந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை செய்து விட்டு அப்படியே போய் கோர்ட்டில் சரணடைய இருவரும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+