புதுக்கோட்டை: கடலுக்குள் சென்ற 6 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்ற 6 மீனவர்கள் இதுவரை வீடுதிரும்பாததையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையனார்பட்டி என்ற கடலோர கிராமத்திலிலிருந்து முனியாண்டி, ராதா,சண்முகம் உட்பட ஆறு மீனவர்கள், இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றனர்.
ஆனால் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் சக மீனவர்கள்ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன இந்த ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர்தான் பிடித்துச் சென்றிருப்பார்கள் என்றுகருதப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் இந்த ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட 29 தமிழக மீனவர்களை விடுதலை செய்து,சமீபத்தில்தான் யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications