கோவில்களின் பக்தர்களுக்கு இலவச "லஞ்ச்": ராம கோபாலன் பாராட்டு
திருப்பூர்:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் வடக்கு தாலுகா இந்து முன்னணி சார்பில் தேசிய பாதுகாப்பு மாநாடு, திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில்நடந்தது. மாநாட்டில் ராம.கோபாலன் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் 63 கோவில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தைகளுக்கு அறவழி கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது எந்த முதல்வரும் எடுக்காத முடிவு.
கோவில்கள் தற்போது நிலை தடுமாறியுள்ளது. கோவிலின் உள் ஆத்மாவை ஜெயலலிதா புதுப்பித்து இருக்கிறார்.இது ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாவா என்றால் நான் ஆமாம் என்று சொல்வேன்.
கருணாநிதிக்கு பாஜக தன்னை விலக்கி விடுமோ என்கிற பீதி வந்து உள்ளது. அதனால்தான் தமிழக பாஜகவுடன்உறவில்லை என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுத்துள்ளார்.
இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு இந்துக்களோடும், இந்துத்வாவோடும் தான் கூட்டணி.அதோடு தான் வாழ்வோம், சாவோம். அதை எப்போதும் கைவிட மாட்டோம்.
இந்துத்துவத்தை பேசும்போது உயிர் பிரிந்தால் என்னைப் போல் பாக்கியசாலி இல்லை என்று ராம கோபாலன்கூறினார்.












Click it and Unblock the Notifications