சென்னையில் பிடிபட்ட குவைத் பெண்ணுக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி பாஸ்போர்ட்டுடன் சென்னைக்கு வந்த குவைத் பெண், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 25ம் தேதி குவைத்தை சேர்ந்த தலால் பலாக் அல் ஆஸ்மீ( 22) என்ற பெண்ணும், ஆந்திர மாநிலம்கடப்பாவைச் சேர்ந்த காதர் பாட்ஷா (25) என்பவரும் குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர்.

அந்த பெண்ணை சோதனையிட்டதில் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததை விமான நிலையஅதிகாரிகள் கண்டு பிடித்தனர். மேலும் அவளை விசாரித்ததில் காதரை தான் காதலித்ததாகவும், அதனால்திருமணம் செய்து கொள்வதற்காக போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததையும் ஒப்புக் கொண்டார்.

மேலும் தன்னை குவைத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அங்கு அனுப்பினால் தன்னை கல்லால்அடித்தே கொன்று விடுவார்கள் என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வந்தனர். தினமும் விமான நிலைய போலீஸ்நிலையத்தில் ஆஸ்மி வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் காதல் ஜோடியைபோலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் "மொகரம்" பண்டிகையான திங்கள்கிழமை ஆகிய மூன்று நாட்களும் விடுமுறைஎன்பதால் இந்தக் காதல் ஜோடி ஆந்திராவுக்குப் பறந்துவிட்டது.

மூன்று நாட்களையும் கடப்பாவில் சந்தோஷமாகக் கழித்த பாட்ஷா-ஆஸ்மி ஜோடி, இன்று மீண்டும் சென்னைவந்தது. அவர்கள் கேட்ட ஜாமீன் மனுவும் இன்றைக்குத்தான் விசாரணைக்கு வந்தது.

ஆனால் கடந்த மூன்று நாட்களிலும் ஆஸ்மி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போடவில்லை என்பதைஅறிந்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ஜாமீன் கிடையாது என்று கூறிவிட்டார்.

மேலும் ஆஸ்மியை 15 நாள் சிறைக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த குவைத்பெண் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+