திமுகவுடன் உறவு நீடிக்குமா? - நாளைதான் கூடுகிறது தமிழக பாஜக
சென்னை:
தமிழக பாஜகவுடன் இனி உறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து ஏற்பட்ட குழப்பம்காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பாஜகவின் முக்கியக் கூட்டம் நடைபெறுவதாக இருந்ததுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"பொடோ" சட்ட மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத் தொடரில் பாஜகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் அக்கட்சியின் மற்றொரு எம்.பியான சி.பி. ராதாகிருஷ்ணனும்கலந்து கொண்டிருப்பதால், அவர்களால் இன்று சென்னை வர இயலவில்லை.
அவர்களும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வசதியாக இந்தக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாகஇக்கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் எல். கணேசன் கூறினார்.
பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியும் இன்று இரவுதான் சென்னை வந்து சேரவுள்ள காரணத்தாலும் இந்தக்கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான பிளவும் இல்லை. அப்படி இருப்பதுபோல்தோன்றினாலும் பேச்சுவார்த்தை மூலம் அப்பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்று பாஜகவின் துணைத் தலைவர்ராமாராவ் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications