அன்னதானத்தை விமர்சிப்பதா?: அமைச்சர் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவில்களில் அன்னதானம் வழங்குவதை விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்துக் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகம்செய்திருப்பதை சில கட்சிகள் கண்டித்து விமர்சனம் செய்துள்ளன.

இது துரதிர்ஷ்டவசமானது. பத்திரிக்கைகள் சிலவும் கூட இதை விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.காமாலைக் கண்ணுடன் இதை அவர்கள் பார்த்துள்ளனர். அதனால் தான் எல்லாமே மஞ்சளாக அவர்களுக்குத்தெரிந்திருக்கிறது.

பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் சென்னை கபாலீசுவரர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தஅன்னதான நிகழ்ச்சிக்கு வந்ததை அரசியலாக்குகிறார்கள்.

உண்மையில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் பாஜகவின் லட்சுமணனுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டது. மற்ற தலைவர்கள் அனைவரும் அவர்களாகவே விரும்பி வந்தார்கள்.

மதிய உணவு நிகழ்ச்சியின்போது ஏராளமானோர் உணவு கிடைக்காமல் வெளியில் காத்திருந்ததாக கூறுகிறார்கள்.தினசரி கல்யாண விருந்து போல 2,000 பேருக்கு உணவு படைக்க அரசு திட்டமிடவில்லை.

பசித்த வேளையில், கோவிலுக்கு வரும், ஜாதி, மத பேதமற்ற வகையில் உணவிடவே அரசு திட்டமிட்டுள்ளது.எனவே பல கோவில்களில் உணவு குறைபாடு காரணமாக பலருக்கு உணவு கிடைக்காமல் போயிருக்கலாம்.

அன்னதானத்தை அனைத்து மதங்களுமே ஆதரிக்கின்றன. எனவே இது ஒரு மத சார்பான நிகழ்ச்சி என்று கூறமுடியாது என்று ராமசாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+