நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் "பொடோ" தாக்கல்
டெல்லி:
வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொடோ சட்டமசோதாவை உள்துறை அமைச்சர் அத்வானி தாக்கல் செய்தார்.
கூட்டம் தொடங்கியதிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த மக்களவைத் துணை சபாநாயகரான பி.எம். சயீது பலமுறை கேட்டுக் கொண்டபிறகே உறுப்பினர்கள் அமைதியானார்கள். பின்னர் பொடோ மசோதாவைத் தாக்கல் செய்யுமாறு அத்வானியைஅவர் அழைத்தார்.
இதையடுத்து பொடோ மசோதாவை அத்வானி தாக்கல் செய்த பின்னர், இம்மசோதா மீதான விவாதம் தொடங்கி,தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணி வரை இடைவிடாமல் இந்த விவாதம் நடைபெறும்.
அதன் பின்னர் பொடோ சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும். மக்களவையில் வெற்றி பெற்று,ராஜ்யசபாவில் இம்மசோதா தோல்வியடைந்ததால், இந்த இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் இது நிச்சயம்நிறைவேறும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலைக்கு மத்தியஅரசு தள்ளப்பட்டது. கடந்த 1961ல் வரதட்சணைத் தடுப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றவும், 1978ல் வங்கிக்கமிஷன் சட்ட மசோதாவை நிறைவேற்றவும் இரு சபைகளும் ஒன்றாகக் கூடின.
அவற்றுக்குப் பிறகு தற்போதுதான் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications