முக்கிய கைதிகளின் காவல் நீட்டிப்பு: அரசு புதிய உத்தரவு
சென்னை:
தமிழக சிறைகளில் உள்ள முக்கியமான கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் முன் அரசிடம் உரியஅனுமதி பெற வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 74 முக்கிய கைதிகளைகாவல் நீட்டிப்பு தொடர்பாக கோர்ட்டுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் தப்புவது, தப்பும் போது பொதுமக்களுக்குஇடையூறு ஏற்படுவதை தவிர்க்கவே இந்தப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
கைதிகளை வெளியில் அழைத்துச் செல்வது தொடர்பான மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை சிறையில் இருந்தவாறே விசாரித்து காவல் நீட்டிப்புக்கு உத்தரவிடும் வகையில் வீடியோ கான்பரன்சிங்வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications