ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 2,000 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்:

வடக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது2,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

போரினால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் தற்போதுதான் சிறிது சிறிதாக தேறிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் நேற்றிரவு சுமார் 7.30 மணிக்கு கடுமையான நிலநடுக்கம்ஏற்பட்டது.

இதையடுத்து பக்லான் பகுதியில் உள்ள நஹ்ரின் என்ற நகரத்தில் சுமார் 4,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள், தூக்கத்திலேயே இடிபாடுகளுக்குள்சிக்கி உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 2,000 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.

மேலும் சுமார் 10,000 பேர் வீடுகளை இழந்து விட்டனர். ரிச்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் அளவு5.8ஆகப் பதிவாகியிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.0ஆகப்பதிவானதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை 2.30 மணியிலிருந்து 4.00 மணி வரை மீண்டும் நிலம் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 1998ல் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இரு வேறு நிலநடுக்கங்களில் 9,000க்கும் மேற்பட்டவர்கள்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+