ஆயுதப்படை காவலருக்கு பெண் போலீஸ் அதிகாரி விட்ட "பளார்" அறை
மதுரை:
மதுரையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவரை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்து தாக்கியதால்,அவருடைய காது செவிடாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அல்-உம்மா கைதிகளான இமாம் அலி மற்றும் ஹைதர் அலிஆகியோர் தப்பிச் செல்வதற்கு உதவிய சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகளைத் தொடர்ந்து காவல் காப்பதற்காக ஆயுதப்படை போலீசார் நாள் முழுவதும்நிறுத்தப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் இவர்கள் காவல் காத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் பெயர்வன்னியன்.
சமீபத்தில் அவ்வாறு காவல் காத்துக் கொண்டிருந்த வன்னியன், அடுத்த ஷிப்ட் ஆயுதப்படை போலீஸ் வந்தவுடன்,வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அந்த போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள ரெஜினா, தன்னிடம் அனுமதி பெறாமல்வன்னியன் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, அவருடைய கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டார்.
தன் கன்னத்தில் ரெஜினா திடீரென்று அறைந்ததால் அதிர்ந்து போன வன்னியனுக்கு மற்றொரு அதிர்ச்சியும்காத்திருந்தது. கன்னத்தில் அறை விழுந்ததால் அவருடைய காதிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
இதையடுத்து வன்னியன் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குஅளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அறிக்கை வந்தால்தான் அவருடைய காது பாதிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவரும்.
இது தொடர்பாக மேலிடத்தில் கூறி ரெஜினா மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரப் போவதாக வன்னியன்கூறினார்.












Click it and Unblock the Notifications