தலித் பஞ்சாயத்து தேர்தல்: 6 பேர் வேட்புமனு தாக்கல்
மதுரை:
மதுரையில் உள்ள தலித் பஞ்சாயத்துக்களில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசிநாளான இன்று (புதன்கிழமை) 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
மதுரையில் தலித் பஞ்சாயத்துத் தொகுதிகளான பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களும் ஆகியதொகுதிகளில் பல வருடங்களாக தேர்தலே நடைபெறவில்லை.
இந்த தொகுதிகள் தலித்துக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், இங்கு தலித்துக்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யவருபவர்களை உயர் ஜாதியினர் மிரட்டி வந்தனர். இதனால் இங்கு பல வருடங்களாக தேர்தலே நடக்கவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி இந்த தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.ஆனால் உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாக இம்முறையும் நேற்று வரை இங்கு யாரும் மனுத் தாக்கல்செய்யவில்லை.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று 6 பேர் தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர்.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பூங்கொடியான், கருத்தக்கண்ணன், பாலுசாமி ஆகிய மூன்று தலித்துகள்வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இதே போல் பாப்பாப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுப்பன், பனிக்கொடி, பாண்டியம்மாள் ஆகிய மூன்றுபேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இந்த இரு தொகுதிகளிலும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக கடைசி நாளான இன்று வரை யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதற்கிடையே நாட்டார்மங்கலம் தொகுதியில் கடைசி வரை யாருமே மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்ததொகுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications