நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மொபைல் வேன்கள் மூலம் ஹால் டிக்கெட்
சென்னை:
நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கானவிண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களையும், ஹால் டிக்கெட்டுக்களையும் பெறுவதற்கானவசதியை இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள், ஹால் டிக்கெட்டுகள்வழங்கப்படுகின்றன.
இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 80,101 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களையும், ஹால்டிக்கெட்டுகளையும் பெற்றுள்ளனர். இவர்களில் 49,747 பேர் மாணவர்கள், 30,354 பேர் மாணவிகள்.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல்கல்லூரியிலும் ஒரு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம்விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் மையங்கள் மூலம் ...
இதற்கிடையே, நடமாடும் மையங்கள் மூலம் இந்த ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள்வழங்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் வசதி இல்லாத பகுதிகளில் கம்ப்யூட்டர்கள், செல் போன்கள், பிரிண்டர்கள் சகிதம் வாகனங்கள்அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை அணுகி மாணவ, மாணவியர் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளைஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இதுவரை தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இந்த நடமாடும் மையங்கள் மூலம் பல மாணவர்கள்விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications