யாரையும் பாதிக்காத பட்ஜெட்: ஜெயலலிதா
சென்னை:
தமிழகத்தின் தற்போதைய நிதி நிலையைக் கவனத்தில் கொண்டு சிந்தித்தால், யாரையும் பாதிக்காத வகையிலேயேதமிழக பட்ஜெட் அமைந்துள்ளது தெரிய வரும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்தார். இந்தபட்ஜெட்டில் புதிதாக பல வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் குறித்து தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
யாரையும் பாதிக்காத வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டே புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வளர்ச்சிக்காக பல நல்ல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரேஷன் அரிசி ஏழைகளுக்கு போய் சேரும் வகையில் அனுமதி சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் பல அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றுஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications