"செக்ஸ்" நர்சுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு உதவியாக இருந்த நர்ஸ் சித்ராவுக்கு முதன்மை செஷனஸ் நீதிமன்றம் நிபந்தனைஜாமீன் வழங்கியுள்ளது.
இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இன்டர்நெட்டிற்கு விற்ற சென்னைையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ்போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆபாசப்படத்தில் நடித்தவர்கள், பிரகாஷுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று பலபேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பிரகாஷுக்கு உதவியாக இருந்த நர்ஸ் சித்ரா பிப்ரவரி 8ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்துஅவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
எனவே இவர் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவைவிசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார்.
இதன்படி ரூ.5,000க்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்துஉத்தரவிட்டார்.
மேலும் ஒவ்வொரு திங்கள்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications