ஏழைகளுக்கு மேலும் சுமை: திமுக
சென்னை:
ஏழைகளைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக சட்டசபை திமுக தலைவர்அன்பழகன் கூறியுள்ளார்.
2002-03ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. அரசி, கோதுமைபோன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 2 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்துள்ளன. பட்ஜெட் குறித்து அன்பழகன் கூறியதாவது:
அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்திருப்பதால், இந்த பட்ஜெட்டினால் ஏழைகள்பெரிதளவு பாதிக்கப்படுவார்கள்.
பட்ஜெட்டில் புதிதாக எந்த செயல் திட்டமும் இல்லை. கிராமப்புற வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில்அறிவிக்கப்படவில்லை.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கான எந்த திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றுஅன்பழகன் கூறினார்.
மலிவு விலை மதுவை ரத்து செய்திருக்கும் தமிழக அரசு, அதே சமயம் பார்களை திறக்க உத்தரவிட்டிருப்பது சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் என்று பாஜக எம்.எல்.ஏவான ராஜா கூறினார். இதே போல் பாமக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications