அதிமுகவில் இணைகிறது எஸ்.டி.எஸ். கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் தலைமையில் இயங்கி வந்த புரட்சித் தலைவர் அதிமுக, தாய்க்கட்சியான அதிமுகவில் இணைகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுஅதிமுகவிலிருந்து விலகிய எஸ்.டி.எஸ். சில காலம் அமைதியாக இருந்தார்.
அதன் பின்னர் புரட்சித் தலைவர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு மேமாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென எஸ்.டி.எஸ். சமீபத்தில் மறைந்தார். இறப்பதற்கு முன்பு தனது கட்சி மீண்டும்அதிமுகவில் சேரும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி வரும் ஏப்ரல் 6ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் எஸ்.டி.எஸ். கட்சியினர் அதிமுகவில்இணைகிறார்கள்.












Click it and Unblock the Notifications