"பார்" லைசன்ஸ் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை
சென்னை:
மதுக் கடைகளில் பார்கள் வைத்துக் கொள்ள பட்ஜெட் அறிவிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மதுக் கடைஉரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தபோதிலும், அதற்காக உரிமக் கட்டணம் (லைசன்ஸ்) செலுத்த வேண்டுமேஎன்பதற்காக அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பொன்னையன், 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று (புதன்கிழமை)தாக்கல் செய்தார்.
மலிவு விலை மது நிறுத்தப்படும் என்று பட்ஜெட்டின்போது அறிவித்த பொன்னையன், ஆனால் மதுக் கடைகளிைல்பார்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.3 லட்சம், நகராட்சிகளில் ரூ.2 லட்சம், பேரூராட்சிகளில் ரூ.1 லட்சம் லைசன்ஸ் செலுத்திபார்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.
பார் வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்ததால் மதுக் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும்லைசன்ஸ் செலுத்த வேண்டியுள்ளதே என்பதற்காக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மலிவு விலை மதுவை ஒழித்தாகி விட்டது, வியாபாரம் வேறு டல்லாக உள்ளது. இந்நிலையில் பார் வைக்கலைசன்ஸ் கட்டணம் கேட்டால் எங்கே போவது என்று அவர்கள் கேட்கின்றனர்.
மேலும், ஒரே பகுதியில் பல மதுக் கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் வியாபாரம் டல்லாகஇருப்பதாகவும் மதுக் கடைக்காரர்கள் ஏற்கனவே குமுறலுடன் உள்ளனர். உரிமக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
பார் அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கட்டணம் கட்ட வேண்டும் என்ற அம்சம் அவர்களது சந்தோஷத்தைப்பாதியாக குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications