குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: ராணுவம் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பலஇடங்களில் ராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16ம் தேதியிலிருந்து தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக தினமும் குஜராத்தில் வன்முறைச்சம்பவங்கள் நடந்து வருகின்றன.

போர்சாத் மற்றும் காம்பாத் போன்ற நகரங்களில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறைக்கும்பலைக் கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

மத்தார் என்ற நகரில் இரண்டு பேர் கத்தியார் குத்தப்பட்டனர். இருப்பினும் அகமதாபாத்தில் நேற்று இரவிலிருந்துஅமைதி நிலவி வருகிறது. இந்நகரின் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.

ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால், அகமதாபாத் நகரின் பதற்றம் மிகுந்த மற்றும் பாதிக்கப்பட்டபகுதிகளில் ராணுவத்தினர் மட்டுமல்லாது எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பாரா மிலிட்டரி வீரர்களும்அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+