ரூ.3,000 கோடி நிதி கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நிதியுதவி கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா நேற்று (வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.3,000 கோடி நிதியுதவிகோரப்படும் என்று கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரூ.3,000 கோடி நிதியுதவி கோரி வாஜ்பாய்க்கு ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தின் ஒரு நகல் தனக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பெங்களூரில் தெரிவித்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications