கோவை கொலைகள்: கட்சி வேறுபாடின்றி அரசுக்கு உதவ கருணாநிதி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோயம்புத்தூரில் நடந்த தொடர் கொலைகள் மதக் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், கட்சி வேறுபாடின்றிதமிழக அரசுக்கும் போலீசாருக்கும் மக்கள் உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று(வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஒரு கொலையை மற்றொரு கொலையால் ஈடுகட்டுவதுதான் சரி என்பது தவறான எண்ணமாகும்.
கோயம்புத்தூரில் எழுந்துள்ள சிறு பொறி, பெரும் தீயாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்அனைவரின் கடமை.
அங்கு நடந்த கொலைகள் மதக் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகஅரசுக்கும் போலீசாருக்கும் மக்கள் உதவ வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ்அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications