கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் படுகொலை: 100 பேரிடம் தீவிர விசாரணை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 100 பேரைக் கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர்-புதூர் ஆர்.எஸ்.எஸ். செயலாளரான முருகேசன், நேற்று (வியாழக்கிழமை) காலை தன்னுடையஜெராக்ஸ் கடையைத் திறக்கச் சென்று கொண்டிருக்கும்போது, ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கத்தியால்குத்திக் கொல்லப்பட்டார்.
கடந்த புதன்கிழமைதான் முஸ்லீம் பிரமுகரான சுல்தான் மீரான் கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதால்,முருகேசன் கொலையையடுத்து கோயம்புத்தூரில் மதக்கலவரம் ஏற்படும் அபாயம் நிலவியது.
இதனால் கோயம்புத்தூர் நகரில் பெரும் பதற்றம் நிலவியது. ஆனால் உடனடியாக அங்கு ஆயிரக்கணக்கானபோலீசார் குவிக்கப்பட்டதால், பதற்றம் ஓரளவு தணிந்தது.
பின்னர் போலீசாரின் முழு பாதுகாப்புடன் முருகேசனின் உடல் இடையார்பாளையம் மயானத்தில் அடக்கம்செய்யப்பட்டது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக்கைது செய்துள்ளனர்.
முருகேசன் கொலைச் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications