அன்னதானத் திட்டத்திற்கு ரூ.11.5 லட்சம் வசூல்
சென்னை:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை ரூ.11.5 லட்சம் வசூலாகியுள்ளதாக இந்துஅறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 63 கோவில்களில் அன்னதானத் திட்டம்தொடங்கப்பட்டது. இந்த அன்னதானத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அன்னதானம் வழங்கும் திட்டத்தில் பக்தர்களும் கலந்து கொள்ளும் வகையில் அந்த கோவில்களில் ஒருஉண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்திற்காக இதுவரை சுமார் ரூ.11.5 லட்சம் வசூலாகியுள்ளதாகவும், இதுவரை அன்னதானம்வழங்கியதில் ரூ.7.7 லட்சம் செலவாகியுள்ளதாகவும், இந்த திட்டத்தால் 1.2 லட்சம் மக்கள்பயனடைந்திருப்பதாகவும் ராமசாமி கூறினார்.
இதற்கிடையே அன்னதானத் திட்டத்திற்காக நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்குஅளிக்க மத்திய அரசிடம் கோரப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.












Click it and Unblock the Notifications