சென்னையில் ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை நடத்த 15நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகுமார் நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரப் போலீஸ் சட்டம் 1888 (41)வது பிரிவின் படி அடுத்த 15 நாட்களுக்கு இந்நகரில் ஊர்வலமோ,ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ அல்லது உண்ணாவிரதப் போராட்டமோ நடத்துவதற்குத் தடைவிதிக்கப்படுகிறது.
இன்று முதல் வரும் 16ம் தேதி பிற்பகல் வரை அமலில் இருக்கும் என்று அவ்வறிக்கையில் விஜயகுமார்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications