காஷ்மீர்: 5 இந்துக்களை கொன்று 7 தீவிரவாதிகள்
ஜம்மு:
ஜம்மு அருகே ஒரு கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த 7 இந்துக்களைக் சுட்டுக் கொன்றனர்.
உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள தான்ட்லி கிராமத்திற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திடீரென்று புகுந்ததீவிரவாதிகள், நுழைந்த வேகத்திலேயே தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளால் சராமாரியாகச் சுடஆரம்பித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்துக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேறு நான்கு பேர் குண்டுக்காயமடைந்தனர்.
பின்னர் அந்தத் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்கு முன், கிராமத்திலிருந்த 10 வீடுகளுக்குத் தீயும் வைத்துவிட்டுஓடிவிட்டனர்.
இதையடுத்து தான்ட்லி கிராமத்திற்கு போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் 3 பேர் பலி:
இதற்கிடையே ரஜெளரி நகரில் இன்று ஒரு குண்டு வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 10பேர் காயமடைந்தனர்.
இன்று காலை ஒரு ஸ்வீட் கடையில் இந்தக் குண்டு பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது.
இந்தக் குண்டு வெடிப்பில் கடைக்குள் இருந்த மூன்று பேர் அடையாளமே தெரியாத அளவுக்கு எரிந்து போய்விட்டனர்.












Click it and Unblock the Notifications