முகமூடியைக் கழற்றுகிறது பா.ஜ.க.
பனாஜி (கோவா):
இந்துத்வா கொள்கைகளை இருந்து பா.ஜ.க. கைவிடாது என்று மத்திய உள்துறை அமைச்சரான அத்வானி கூறினார்.
மதவாதத்தை விட்டுவிடுவதாகக் கூறியதால் தான் பா.ஜ.கவுக்கு திமுக, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள்ஆட்சியமைக்க ஆதரவளித்தன.
ஆனால், இப்போது மீண்டும் தனது மதவாதப் பாதைக்கு பா.ஜ.க. திரும்பிவிட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.நரேந்திர மோடியை வைத்து தனது இந்துத்வா கொள்கைகளை குஜராத்தில் பா.ஜ.க. அமல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் மதச் சண்டைக்கு பலியாகியுள்ளனர். அங்கு தேர்தலை நடத்திபா.ஜ.கவுக்கு வெற்றி கிடைத்தால் இதே போன்ற மதவாதக் கொள்கையை நாடு முழுவதும் அமலாக்கி ஓட்டுகளைவெல்ல அக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக குஜராத் ஒரு சோதனைக் களமாக பா.ஜ.கவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அத்வானியே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். பனாஜியில் தேசிய செயற்குழுக் கூட்டத்தில்பேசிய அவர்,
இந்துத்வா கொள்கைள் மூலம் பாரதீய ஜனதாவுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதனால் இதை விட்டுவிடநாங்கள் தயாராக இல்லை.
பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநிலத்தில் யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய கூட்டணிக்கட்சிகளுக்கு உரிமையில்லை.
விரைவில் மத்தியில் அமைச்சரவையும் மாற்றியமைக்கப்படும்.
கடந்த 4 வருடங்களாக தேசிய ஜனநாயக் கூட்டணியின் கொள்கைகளை கடைபிடித்து வந்தோம். இனி எங்கள்கொள்கைகளை அமலாக்குவோம் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications